சன்னி ஜோசப்புக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி...! - Seithipunal
Seithipunal


கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் குறித்த பல வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.இதில் நேற்று கட்சி, மாநிலத் தலைமையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன.

அவ்வகையில், கே. சுதாகரனுக்குப் பதிலாக கண்ணூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், பேராவூர் எம்எல்ஏவுமான 'சன்னி ஜோசப்' நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றம் வந்துள்ளது.இதனால் சன்னி ஜோசப் அவர்களுக்கு இன்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் 'ராகுல் காந்தி',தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி:

அதில் அவர் தெரிவித்ததாவது, "புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் கேரளத்தின் நீதி மற்றும் மாநில முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மக்களுக்கும் பலத்தின் தூண்களாகவும் சேவை மனப்பான்மையும் கொண்ட ஒரு அச்சமற்ற போர்வீரன் கே.சுதாகரன்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi congratulates Sunny Joseph


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->