அதிர்ச்சியான தகவல் ஒன்று சொல்கிறேன்... மத்திய அரசு கடித தகவலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal



தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகையை நிறுத்தக் கோரி மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால்தான் நெல் உற்பத்தி அதிகமாகிறது என்றும், இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். நெல் உற்பத்தி அதிகரிப்பதை ஒரு சாதனையாகக் கருதாமல், அதை ஒரு சிக்கலாகக் கருதி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யச் சொல்வது எவராலும் ஏற்க முடியாத ஒன்று என அவர் கண்டனம் தெரிவித்தார். அதிக விளைச்சலை ஒரு தடையாகக் கருதும் மத்திய அரசின் போக்கு விவசாயிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் செயல் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மௌனத்தையும் முதல்வர் கடுமையாகச் சாடினார். "பச்சைத் துண்டு அணிந்து கொண்டு தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் பழனிசாமி, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் இந்த மிகப்பெரிய துரோகத்தைக் கண்டு ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?" என அவர் கேள்வி எழுப்பினார். 

தமிழர் உணர்வும், விவசாயிகளின் மீது உண்மையான அக்கறையும் இருந்தால், பழனிசாமி உடனடியாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protecting Farmers Rights CM Stalin Slams Union Government Move to Cut Paddy Subsidies


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->