பரிசு விழா! வார இடைவெளியில் மூன்று கட்டங்களாக...! - த.வெ.க. விஜய்
Prize ceremony In three phases at weekly intervals TVK Vijay
த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள்,இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அவ்வகையில், சென்னையில் 3 கட்டங்களாக 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நடைபெற இருக்கிறது.

இதில் முதற்கட்ட பரிசளிப்பு விழா, இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.அடுத்ததாக 2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இந்தப் பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி, பொதுச்செயலாளர் ''புஸ்சி ஆனந்த்'' சிறப்பாக செய்து வருகிறார்.
English Summary
Prize ceremony In three phases at weekly intervals TVK Vijay