420-களுக்கு 400 இடங்களில் வெற்றியாம்.!! - பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்திய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் இது ஒரு மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சனம் செய்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை மோசடி பேர்வழிகள் என கடுமையாக தாக்கியுள்ளார். 

குறிப்பாக ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை. 420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகிறார்கள். நானும் இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் கட்சிகள் திமிர்த்தன்மையானவை என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prakash Raj criticized NDA alliance like 420


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->