பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திரமோடி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள். தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. 

இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாக பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஆரோக்கியத்தை வழங்கட்டும்" என்று வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேபோல் தலைநகர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், செழிப்பும் வளரட்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருநாளில் இன்பமும் அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" என்று தெறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmmodi and minister amitshah wish pongal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->