அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் - வெளியான அறிவிப்பு.!
pmk announce 10 June 2022
கும்பகோணத்தை அடுத்த உடையாளூரைச் சேர்ந்த நிர்வாகி ஜெயந்தன் என்கிற ஜேம்ஸ் என்பவரை, பாமகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைமை இன்று விடுவித்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய நிர்வாகி ஜெயந்தன் என்கிற ஜேம்ஸ் என்பவர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (10.06.2022) வெள்ளிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்.
அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்."
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pmk announce 10 June 2022