Breaking | டாஸ்மாக் கடையில் கத்திக்குத்து.! ஒருவர் பலி., ஒருவர் உயிருக்கு போராட்டம்.! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் டாஸ்மார்க் கடை வாசலில் விற்பனையாளர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் துளசிதாஸ் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்கள். இவருடன் ராம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் டாஸ்மாக் கடையை திறக்க வந்த துளசிதாஸை, டாஸ்மாக் கடையின் வாசலில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

மேலும், இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மற்றொரு ஊழியரான ராம் என்பவரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 

படுகொலை செய்யப்பட்ட துளசிதாஸ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே சமயத்தில் படுகாயமடைந்த ராம்.,யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

orakadam tasmac staff murder


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->