பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் தரப்புக்கு அனுமதி மறுப்பு - ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு பச்சை கொடி!
ops side admk eps side pm modi
இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தென் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் பெங்களூருக்கு வந்து, சென்னை-மைசூர் இடையான வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் அதே விமான மூலம் பெங்களூரில் இருந்து மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் வந்துள்ளனர்.
எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் ஓபிஎஸ்.,க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்.,ன் ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
ops side admk eps side pm modi