அதிமுக நிர்வாகிகள் கூட்டம்.. திடீரென திட்டத்தை மாற்றி ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுகவினர் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையின் நிறுவனர் என்ற பொறுப்பிலிருந்து ஓ பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 27ஆம் தேதி திங்கள்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனியிலிருந்து சென்னை திரும்புகிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops returns to chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->