#சற்றுமுன் || ஒற்றை தலைமை - விடாப்பிடியாய் ஈபிஎஸ் தரப்பு.! விட்டுக்கொடுக்காமல் போர்க்கொடி தூக்கும் ஓபிஎஸ் தரப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

இதற்கிடையே, 'தலைமை ஏற்க வா தலைவா' என்று ஓ.பி,எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்ட, இபிஎஸ் ஆதரவாளர்களும் 'தலைமை ஏற்க வா தலைவா' என போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி, அசாதாரண சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை பற்றி பொதுக்குழு முடிவெடுக்கலாம் என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேபோல், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ளதால், தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு போர்க்கொடி தொக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்களே ஒற்றைத் தலைமையை முடிவு செய்யலாம் என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS EPS FOR ONE HEAD IN ADMK ISSUE


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->