சசிகலா தொடர்ந்த வழக்கை.. ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது இன்று தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டா.ர் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில், 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் இருவரும் பொது செயலாளர் மற்றும் துணை பொது செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 

பொது செயலாளர் இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பதவியிலிருந்து நீக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சார்பில் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் சசிகலா தரப்பினர் மற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS EPS Case Judgment


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->