அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் ஓபிஎஸ்... தொண்டர்களின் கோஷம் முழங்க ஓபிஎஸ்.!
ops admk head issue part one
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை என்று விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி மேலும் பதற்றத்தை உண்டாக்கினர். இதற்கிடையே, ஓபிஎஸ் அளித்த பேட்டியில், 'அதிமுகவில் தற்போதைய நிலைக்கு ஒற்றை தலைமை தேவையில்லாத ஒன்று. ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி கே பழனிசாமி தான் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
கடந்த மூன்று தினங்களாக ஓபிஎஸ் தனது இல்லத்திலும், சேலத்தில் தங்கியுள்ள எடப்பாடி கே பழனிசாமி அவரது இல்லத்திலும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் "அதிமுகவின் பொதுச் செயலாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்க.. அதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் ஓபிஎஸ் வாழ்க" என்று கோஷமிட்டனர். ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களின் கோஷத்தை கண்டும் காணாமல், கருத்து தெரிவிக்காமல் அமைதியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
English Summary
ops admk head issue part one