நான் எம்.பி சீட்டுக்காக கூட்டணியில் சேரவில்லை..கமலஹாசன் ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சியிலும் எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார் கமலஹாசன் என்பது குறிப்பிடதக்கது. 

கமலஹாசன் திமுக கூட்டணியில் இணைந்து இருப்பது ஒரு எம்பி சீட்டுக்காக தான் என்று பலரும் விமர்ச்சித்து வத்தனர். சமூகவலைத்தளங்களில் கமலஹாசன் சந்தித்த முதல் தேர்தலின் பிரச்சார வீடியோவை பலரும் பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால், மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த ஒரு சீட்டும் ஒதுக்கவில்லை திமுக. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கமலஹாசன் பெயரை இணைத்தது திமுக. அந்த வகையில், நேற்று வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ஓட்டேரி, ராயபுரம் போன்ற பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்  கமலஹாசன். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த  கமலஹாசன் பேசுகையில்,

2050 ஆண்டு மோடியின் கல்வி இலக்கை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து விட்டது.  நான் எம்.பி  சீட்டுக்காக கூட்டணியில் சேரவில்லை ,நாட்டு நலனுக்காக சேர்த்துள்ளேன் என்றார் கமலஹாசன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

not join alliance for MP ticket Kamal Haasan passionate speech


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->