எதிரி அல்ல… உட்புற சூழ்ச்சிக்காரர்களே ஆபத்து...! - அதிமுக பொதுக்குழுவில் சிவி.சண்முகம் வெடிகுண்டு பேச்சு
Not enemy danger internal intriguers CV Shanmugams bombshell speech AIADMK general committee
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி. சண்முகம், கட்சியின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கடுமையாக சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது,“அதிமுக ஆட்சி இருக்கட்டும், இல்லாவிட்டாலும், நம்மை முழுமையாக முடக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் எதிரி திமுக மட்டும் அல்ல; வெளிப்படையான துரோகிகளும் மட்டும் அல்ல. நம்மோடு நெருக்கமாக பழகிக் கொண்டு, நட்பின் முகமூடி அணிந்தே நம்மை உள்ளிருந்து தளர்த்த விரும்பும் சிலரும் உள்ளனர்.
எதிரிகள் யார் என்பதை நாங்கள் அறிவோம். திமுக, கருணாநிதி, ஸ்டாலின். துரோகிகள் யார் என்றும் புரிந்ததே. ஆனால் 'உறவாடி சேதப்படுத்துபவர்கள்' தான் இன்றைய மிகப்பெரிய அபாயம். அரசியலில் புரோக்கராக நடித்து சூழ்ச்சி வகுப்பவர்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்; அவர்களை தெளிவாக அடையாளம் காண வேண்டும்.
இத்தனை சதிகள், அரசியல் கண்ணிகள், அதிகார–பணம்–பேரழுத்தங்கள் நடுவிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையே காரணம்; அதிமுக இன்று உறுதியான பாறைபோல் நிற்கிறது. இந்த இயக்கத்தை எவராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாத நிலைக்கு அவர் கொண்டு வந்துள்ளார்.
இதே நிலை திமுக–ஸ்டாலினுக்கு வந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? சிதறியிருப்பார்கள். ஆனால், அதிமுக இதை உறுதியுடன் சமாளிக்கிறது. இந்நேரத்தில், சில ஊடகங்கள் கணிப்பு என்ற பெயரில் கற்பனைக் கதைகள் கட்டி, அதிமுக தொண்டர்களின் மனவலிமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள், அதே நேரத்தில், திமுக ஆட்சிக்கு மிச்சம் இருக்கும் காலமும் அந்த 100 நாட்களே. கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்த 100 நாட்களுக்குள் அதிமுகவை பலவீனப்படுத்த, கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் நம்பிக்கை குலைக்கும் பிரச்சாரத்தை சிலர் திட்டமிட்டுப் பரப்புகின்றனர்” என்று அவர் எச்சரித்தார்.
English Summary
Not enemy danger internal intriguers CV Shanmugams bombshell speech AIADMK general committee