நேருவின் சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்...! - ராகுல் காந்தி
Nehrus ideologies will always guide us Rahul Gandhi
''ஜவஹர்லால் நேரு'' இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுள் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ''ஜவஹர்லால் நேரு'' பதவியேற்றார். இவர் கடந்த 1964-ம் ஆண்டு மே 27-ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும் இவர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்துள்ளார்.இந்நிலையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள் (மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இதில் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல்வேறு தலைவர்களும் நேருவுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
ராகுல் காந்தி:
இந்நிலையில், நேருவின் நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது,"இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
ஒருங்கிணைந்ததொரு வலுவான இந்தியா என்ற கனவுடன் சுதந்திர இந்தியாவுக்காக வலுவானதொரு அடித்தளத்தை தமது தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய தலைமைப் பண்பால் அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றவர் நேரு. சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அன்னாரது பங்களிப்பு மதிப்பிற்குரியது.
'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Nehrus ideologies will always guide us Rahul Gandhi