#BREAKING | சரத் பவார் ராஜினாமா விவகாரம் | அதிரடியாக நிறைவேறிய தீர்மானம்! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக, சரத் பவார் தனது தலைவர் பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகுவதாகவும் சரத் பவார் அறிவுத்திருந்தார்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற குரல் அக்கட்சியில் எழ, அதற்க்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு கமிட்டி ஒன்றை சரத் பவார் அறிவித்திருந்தார். அதன்படி கமிட்டி கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத் பவார் தொடர வேண்டுமென அவர் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சரத் பவார் அமைத்துள்ள குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், சரத் பவார் தனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCP SharadPawar resign issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->