தொடரை சுமுகமாக நடத்த விடுங்க.. எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திர மோடி கோரிக்கை.!!
NarendraModi request to all party run parliament smoothly
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. குடியரசு தலைவரின் உரையுடன் இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அமலையில் ஈடுபடுபவரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தாரை முழுமையாக சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
NarendraModi request to all party run parliament smoothly