ஆளில்லா ரோட்டில்.. கையாட்டிச் சென்ற நரேந்திர மோடி.!!
Narendra Modi waved on empty Road
பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது முறையாக இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்தார்.
வேலூர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆளில்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்திலிருந்து வேலூர்கோட்டை மைதானம் வரை 9 கிலோமீட்டர் தூரம் சாலை மார்க்கமாக சென்ற நரேந்திர மோடி வெறிச்சோடி காணப்பட்ட சாலையில் கையசைத்தவாறு சென்றார்.
பொதுமக்கள் கூடுவார்கள் என சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் மோடியை வரவேற்க பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. மக்கள் கூடுவார்கள் என பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3500 போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பொது மக்களை விட போலீசாரின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
English Summary
Narendra Modi waved on empty Road