"காவிரி, கச்சத்தீவு விவகாரங்களில் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்": நயினார் நாகேந்திரன் சாடல்!
Nainar Nagendran Slams Congress Over Cauvery Dispute and Katchatheevu Issue
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம்: பிரதமர் மோடி ஆட்சியில்தான் 2018-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது கர்நாடக காங்கிரஸ் அரசுதான் எனத் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு & ராகுல் காந்தி அமைதி: மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசைத் தட்டிக்கேட்காத காங்கிரஸ், தமிழகம் வந்த ராகுல் காந்தி காவிரிப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சென்றுவிட்டதாகச் சாடியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்: காவிரி நீர் பிரச்சினை மட்டுமின்றி, கச்சத்தீவைத் தாரை வார்த்துத் தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த வரலாறு காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு என விமர்சித்துள்ளார்.
பாஜகவின் நிலைப்பாடு: தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாஜக தெளிவான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தமிழக நலன் குறித்துப் பாஜகவுக்குக் காங்கிரஸ் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran Slams Congress Over Cauvery Dispute and Katchatheevu Issue