மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை! திருட்டுப் போன 152 பவுன் நகை, 30 லட்சம் பணம்...!
Mysterious people break into doctors house 152 pounds jewelry and 3 million rupees cash stolen
கடலூரில் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த நிலக்கடலை வியாபாரியான 75 வயது காசிலிங்கம். இவரது மகன் 45 வயதான ராஜா விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்திலுள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பிறகு மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவிலிருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.அதன் பிறகு கடலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Mysterious people break into doctors house 152 pounds jewelry and 3 million rupees cash stolen