மும்பை மேயர் நாற்காலி யாருக்கு? 'பெண்கள் - பொதுப்பிரிவு' ஒதுக்கீடு: பாஜக கூட்டணி வெற்றி உறுதி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 29 மாநகராட்சித் தேர்தல்களில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி (பாஜக + ஷிண்டே சிவசேனா) 25 இடங்களைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது.

மும்பை மாநகராட்சி நிலவரம்:

ஒதுக்கீடு: மும்பை மேயர் பதவி 'பொதுப்பிரிவு பெண்களுக்கு' ஒதுக்கப்பட்டுள்ளது.

பலப்பரீட்சை: 227 வார்டுகளைக் கொண்ட மும்பையில் பெரும்பான்மைக்கு 114 உறுப்பினர்கள் தேவை. பாஜக கூட்டணி 118 இடங்களுடன் (பாஜக 89, ஷிண்டே அணி 29) வலுவாக உள்ளது.

வேட்பாளர்கள்: பாஜக பெண் கவுன்சிலர்களான யோகிதா சுனில் கோலி மற்றும் தேஜஸ்வி அபிஷேக் கோசல்கர் ஆகியோர் மேயர் ரேஸில் முன்னிலையில் உள்ளனர். தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

உத்தவ் அணியின் குற்றச்சாட்டு:

65 வார்டுகளைக் கைப்பற்றியுள்ள உத்தவ் தாக்கரே அணி, இந்தக் குலுக்கலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. எஸ்டி (ST) பிரிவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் உத்தவ் அணியில் மட்டுமே உள்ளனர். ஒருவேளை மேயர் பதவி அப்பட்டியலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், உத்தவ் அணிக்கு மேயர் பதவி கிடைத்திருக்கும். இதனைத் தவிர்க்கவே திட்டமிட்டுப் பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மேயர் கிஷோர் பட்னாகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பெண் மேயர்கள்:

மும்பை மட்டுமல்லாது நவி மும்பை, புனே உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுக்குப் பெண் மேயர்களே தலைமை தாங்க உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai Mayor Seat Reserved for Women General BJPled Mahayuti Set to Clinch Post


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->