இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு "மாணவர் சிறப்புப் பேருந்து" - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு "மாணவர் சிறப்புப் பேருந்து" இயக்கவேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துகளால், கடலூர் மற்றும் ஓசூரில் பள்ளி மாணவர்கள் இருவர் ஓடும்பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளனர். 

இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கடந்த (24/11/2021) அன்று முன்வைத்த "மாணவர் சிறப்புப்பேருந்து" கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அரசுப்பேருந்துகளில் பயணம் செய்வோரின் கண்ணியமும், பாதுகாப்பும் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இவ்வகை அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM REQUEST GOR GOVT SCHOOL BUS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->