தலைவர் பதவியிலிருந்து விலகாதிங்க! சரத் பவாருக்கு முக ஸ்டாலின் அவசர கோரிக்கை!
MKStalin request to NCP SharadPawar
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய, சரத்பவரால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி கூட்டம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக, சரத் பவர் தனது தலைவர் பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகுவதாகவும் சரத் பவர் அறிவுத்திருந்தார்.
இது கட்சியில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அஜித் பவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற குரலும் அக்கட்சியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு கமிட்டி ஒன்றை சரத் பவார் அறிவித்திருந்தார். அந்த கமிட்டி சரத் பவார் தலைவராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சரத் பவார் தான் நீடிக்க வேண்டும். அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், புதிய தலைவர் தேர்வு பற்றி இன்று நடக்கக்கூடிய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின், சரத் பவர் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "2024 தேர்தலில் இந்தியாவில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்குவகிக்கும் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாக மீண்டும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin request to NCP SharadPawar