முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை முன்னேற்றம்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுவாசம் தொடர்பான சிக்கலை விளக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் எந்தவொரு கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்பேரில் அவர் தற்போது மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

இன்றைய நாள் முதலமைச்சருக்கு பலரும் நேரில் வந்து நலமறிந்தனர். குறிப்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி மற்றும் சகோதரர் மு.க.தமிழரசு அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், சட்டமன்ற, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விரிவாக அறிந்துகொண்டனர்.

முதலமைச்சரின் உடல்நிலை சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin health update Apollo hospital 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->