போராட்டத்தை தடுக்க முயற்சி; அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் வேலு நாளை பேச்சுவார்த்தை..!
Minister Velu to hold talks with government employee and teacher associations tomorrow
கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் ப வாக்குறுதிகளை கொடுத்தது. குறிப்பாக, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என, பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய இன்னும் சில மாதங்களே உள்ளது. அவர்கள் வாக்குறுதியளித்த படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த சூழலில் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் 22-இல் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சு நடத்திய நிலையில் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து வரும் ஜனவரி 06-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நாளை ஜனவரி 02-இல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் வேலு பேச்சு நடத்தவுள்ளார். அதனபடி, அன்றைய தினம், காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும், 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Minister Velu to hold talks with government employee and teacher associations tomorrow