#BigBreaking: கொரோனா எதிரொலி., தமிழகத்தில் சற்றுமுன் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு.! - Seithipunal
Seithipunal


தமிழக கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் 10  பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று, இந்து சமய அறநிலை துறை தெரிவித்துள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடனும், பக்தர்கள் நலன் கருதியும் திருக்கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டு அதனை தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு திருக்கோயில்களில் பின்பற்றபட வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வகுத்து பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 

* நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.04.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. 

* 31.06.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி திருக்கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும். 

* எனினும் திருக்கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த திருக்கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

* திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை, மேற்கண்ட விவரப்படியான நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் தவறாது கடைபிடிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளில் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. 

100 சதுர மீட்டர் அல்லது 1075 சதுர அடிக்கு 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மற்றும் திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. 

திருக்கோயில்களில் திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்தப்பட வேண்டும். 

ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து. சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marrage in temple some new rule


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->