பெரும்பான்மையை இழந்த மகிந்த ராஜபக்ச அரசு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahinda rajapaksa govt lost the majority


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->