மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபானம் விற்பனை! சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் கிராமத்தில் அமைக்கப்பட்ட மனமகிழ் மன்றம் தொடர்பாக முத்துசாமி என்ற நபர் தாக்கல் செய்த வழக்கில், அந்த இடம் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுடன் நெருக்கத்தில் உள்ளது. எனவே, அங்கு மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இரண்டு கேரம் பலகைகள் வைத்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இது எதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது? மனமகிழ் மன்றங்களின் சட்ட அடிப்படை என்ன? உறுப்பினர் எண்ணிக்கை என்ன? அவர்கள் பெயருக்கு மட்டும் சில்லறை மதுபான விநியோகம் நடக்கிறதா? கலால் துறை உரிய கண்காணிப்பு செய்கிறதா?" என தொடர் கேள்விகளை எழுப்பினர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் மேலாளர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai HC Tasmac Manamakish mandram case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->