திமுகவுக்கு அடுத்த சிக்கல்! அதிமுக தரப்பு மனு மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. 

இதை எதிர்த்து மறைந்து முன்னால் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையத்தை கலைத்ததோடு முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் கடந்த 2018 ஆம் ஆண்டு என உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில்புதிய தலைமைச் செயலகம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனை எதிர்த்து தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடர்பாக 2018ல் புகார் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் அரசியல் நோக்கத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்பு துறையால் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது வரை எந்த ஒரு ஆதாரமும் கண்டுபிடிக்க இயலவில்லை. அரசு தாக்கல் செய்த அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். 

அதற்கு ஜெய்வரத்தன் தரப்பில் அரசியல் என்பது தனது தொழில் இல்லை என்றும், மருத்துவர் என்ற அடிப்படையில் இந்த புகார் அளித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கில் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஜெயவருதன் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC directs TNgovt DVAC to respond in new chief secretariat case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->