நான்கு மாதங்களுக்குப் பிறகு அண்ணாமலையின் திருவாய் மலர்ந்தது..! கே.எஸ் அழகிரி கிண்டல்..! - Seithipunal
Seithipunal


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்பொழுது தமிழக அரசு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிருந்தார். இதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் "தமிழகத்திற்கு வந்த மோடிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பிரதமர் மோடி சென்னைக்கு வந்து சென்று நான்கு மாதம் ஆகிறது. நான்கு மாதங்கள் கழித்து அண்ணாமலையின் திருவாய் மலர்ந்துள்ளது. பாதுகாப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டும் அண்ணாமலைக்கு தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு எந்தவித குறைபாடும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

அண்ணாமலை யோசித்து யோசித்து ஒவ்வொரு குற்றச்சாட்டையும் சொல்லி வருகிறார். ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பேசுகிறார்கள். பாஜகவிற்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது. தவறான விளம்பரங்களுக்காக இவர்கள் செயல்படுகிறார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KS Alagiri criticizes Annamalais comment on Modis security


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->