விஜய் கைது செய்யப்பட வேண்டும் - நடிகையை தொடர்ந்து விசிக போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 

தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலையும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நடிகை ஓவியா தனது கருத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் விஜயை கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்து விவாதத்தை தூண்டியுள்ளது. 

இந்நிலையில், விஜய் கைது செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மத போதையால் 1992 ல் மகாமக கும்பாபிசேகத்தில் 50 பேரும், 2011 ல் சபரிமலையில் 102 பேரும், 2025 உபி- பிரயாக்ராஜ் கும்ப மேளாவில் 30 பேரும் மரணித்தனர்.

தற்போது சினிமா போதையால் தமிழ்நாட்டில் 40 பேர் மரணித்துள்ளனர். சினிமா மோகமும் மத மோகமும் மக்களை கொன்று வருவது மறுக்கவே முடியாது.

சினிமா மோகத்தை வைத்து அறுவடை செய்ய முனைந்த நடிகர் விஜய் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Stampede TN Govt vck vanniyarasu


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->