பண்ணை வீடு : கும்பலாக சூதாட்டம் - திமுக பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்!
karunkal palaiyam dmk members arrest
ஈரோடு அருகே பண்ணை வீட்டில் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடிய வழக்கில் திமுக பிரமுகர் உட்பட 18 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று ரோந்து பணி போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்த போலீசார், பணம் வைத்து மெகா சூதாட்டம் நடைபெற்றதை கண்டு அதிர்ந்து போயினர்.
போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற கும்பலை, சுற்றிவளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் திமுக பிரமுகர்கள் அலாவுதீன், சின்னதுரை இருவரும் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த வீட்டில் இருந்து சீட்டு கட்டுகள், 3.16 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
karunkal palaiyam dmk members arrest