'எனது பெயரை சொல்லியுள்ளாரா..? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா..? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில்..! - Seithipunal
Seithipunal


மதுரையில் நேற்று  தவெக மாநாடு நடைப்பெற்றது. இதில், அக்கடிச்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தமிழக அரசியல் தலைவராகளை சரமாரியாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது குறித்த நிருபர்கள் கேள்விக்கு ' முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா,''என ராஜ்யசபா எம்பி கமல் பதிலளித்துள்ளார்.

மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' வரும் சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன்,'' எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசனிடம்  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள கமல், என்ன கருத்து சொல்வது..? எனது பெயரை சொல்லியுள்ளாரா..? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா..? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா..? அவர் எனது தம்பி என்று பதில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal response to Vijays speech at the TVK conference


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->