மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசு.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!!
jayakumar press meet about neet issue
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏக்கள் கே.பி. முனுசாமி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ராஜ்பவன் வந்து ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஞ்சாப் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வாழ்த்து கூறினோம். நீட் விவகாரத்தில் மாணவர்களை திமுக ஏமாற்றுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட்தேர்வு ஒழிக்கப்படும் என பொய்யான தகவல்களை கூறி மாணவர்கள் சமுதாயத்தை இந்த அரசு வஞ்சித்துள்ளது என கூறினார்.
English Summary
jayakumar press meet about neet issue