BREAKING | அன்புசெழியனை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு.! - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செல்வனின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, எஸ் ஆர் பிரபாகரன் ஆகியோர் அலுவலகங்களிலும் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 5 மணிமுதல் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புச்செழியனுக்கு சொந்தமான தேனி, மதுரை, மேகமலை, சென்னையில் 10 இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

அண்மையில் வெளியான திரைப்படங்கள் வருமானத்துக்கு அதிகமான, கணக்கு காட்டப்படாத பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் வந்த புகார் அடிப்படையில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இது மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபாகரன் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid In Anbuchezhiyan And Kalipuli Dhanu office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->