மேகதாது ஆணை விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து தமிழக அரசு காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. 

தமிழக அரசு விடுத்துள்ள இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு விடுத்துள்ள  கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian SC Order karnataka mehathat issue


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->