அமைச்சரவையில் இருந்துகிட்டு கூட்டணி இல்லைன்னா எப்படி...? திருமாவளவனின் வார்த்தை விளையாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி...!
How there no alliance even after being cabinet Manickam Tagore response Thirumavalavan wordplay
இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். அந்த வரிசையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி நிலை மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதாலேயே கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என்று பொருள் கொள்ள முடியாது.

அமைச்சரவையில் பங்கேற்பதும், அரசியல் கூட்டணியில் இடம்பிடிப்பதும் இரண்டும் வேறுபட்ட அம்சங்கள். கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.அமைச்சர்களின் ‘ரீல்ஸ்’ வெளியீடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்று சமூக ஊடகங்களின் தாக்கம் உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தங்களது நிகழ்வுகளை பதிவு செய்து வெளியிடுவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.
இருப்பினும், பொதுவெளியின் கண்ணியத்திற்கும், பொது ஒழுக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த கருத்தை சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “அமைச்சரவையில் பொறுப்பேற்ற பிறகு கூட்டணியில் இல்லை என்று கூறுவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும். ஆட்சியில் பங்கேற்கும் கட்சிகள் கூட்டணியின் அங்கமாகவே கருதப்படுகின்றன.
எனவே வார்த்தை விளையாட்டைத் தவிர்த்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், “த.வெ.க. தலைமையில் வலுவான கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியை எவ்வாறு விமர்சித்தாலும், மக்கள் நலப் பணிகளை முன்னெடுப்பதில் எங்களின் கவனம் தொடர்ந்து இருக்கும். ஆட்சிக்கு ஆதரவு அளித்த பிறகு அதற்கு முரணான கருத்துகளை வெளியிடுவது அரசியல் தேவையற்ற சர்ச்சைகளுக்கே வழிவகுக்கும்” என தெரிவித்தார்.
English Summary
How there no alliance even after being cabinet Manickam Tagore response Thirumavalavan wordplay