#BigBreaking || ஹிஜாப் விவகாரத்தில் திடீர் திருப்பம் : சற்றுமுன் மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம்,  வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்ததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இதில், சில மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இரு மூன்று நடந்துவந்த நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்வது தொடர்பான வழக்காகி கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, "நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்வதற்கு தடை" விதித்து  உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஹிஜாப், காவி விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மேல்முறையீடு செய்தனர்.

அதில், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு அமைந்திருப்பதாகவும், எனவே விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கர்நாடக ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

(முன்னதாக நேற்று இது சம்மந்தமான வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, இப்போது இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab issue Supreme Court Reject


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->