பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய அரசிற்கும் பாராட்டு தெரிவித்த ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து தமிழக மாணவர்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அரசு மத்திய அரசு என்பதை நிரூபித்திருக்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.

நாட்டிலேயே ஒரு மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து அம்மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான்.  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மருத்துவத் திட்டங்களுக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்குவதும் பெரிதும் பாராட்டத்தக்கது. குறிப்பாக புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் இயக்கப்படுவதன் மூலம் அந்தந்த மாவட்டப் பகுதியை சார்ந்த மாணவர்கள் பெரும் பயனடைவார்கள்.

மேலும் பாரதப் பிரதமர் அவர்கள் சங்கத்தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் சார்ந்த படிப்புக்கு சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டடத்தையும் திறந்து வைத்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்திற்கு நேரடியாக வந்து மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழிக்கான புதிய வளாகத்தையும் திறந்து வைக்க முடியாவிட்டாலும் கூட காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வானது நேரடியாக நடைபெற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாரதப் பிரதமர் அவர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ் மொழியில் பேசி உரை நிகழ்த்தியது தமிழர்களுக்கு பெருமையாக இருக்கிறது. இன்றைக்கு பாரதப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்திருக்கும் மருத்துவக் கல்லூரிகளாலும், செம்மொழிக்கான புதிய வளாகத்தாலும் தமிழக மாணவர்கள், தமிழ் மொழி என ஒட்டு மொத்த தமிழ்நாடே முன்னேறும், வளம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. 
பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டிற்காக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன வளாகத்தையும் திறந்து வைத்ததற்காக த.மா.கா சார்பில் பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GK Vasan thanks for pm modi and central govt


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->