தமிழகத்தின் முக்கிய புள்ளி மறைவு.. அதிர்ச்சியிலும், சோகத்திலும் அரசியல் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக பணியாற்றிக்கொண்டிருந்த உமையாள் ராமநாதன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது என  த.மா.கா சார்பில் ஜி கே வாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் உமையாள் ராமநாதன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அழகப்பா செட்டியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்த உமையாள் ராமநாதனின் மறைவு பல்கலைக்கழகத்திற்கு பேரிழப்பாகும்.

தனது தந்தையான டாக்டர் அழகப்பச் செட்டியாரைப் போல இவரும் கல்விக்காக, மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்திற்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். குறிப்பாக அழகப்பச் செட்டியார் எப்படி தன் சொத்துக்களை விற்று பல கல்விச்சாலைகளை உருவாக்கினாரோ அதே போல இவரும் கல்விக்காக வாழ்ந்தவர். 

அழகப்பா பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் தனது பங்களிப்பை மிகச்சிறப்பாக மேற்கொண்டவர். மேலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையில் செயல்பட்டவர்.

கல்வித்துறையிலும், சமூக நலப்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்ட உமையாள் ராமநாதன் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், கல்வித்துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan mourns the death umayal ramanathan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->