தமிழக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.. வருத்தத்தில் ஜிகே வாசன்.!! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். டாக்டரான இவர் முன்னாள் எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ மோசஸ் மறைவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த டாக்டர் மோசஸ் Ex - MLA . , அவர்கள் உடல்நிலை குறைவால் காலமானர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் . 

டாக்டர் மோசஸ் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் , மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் தலைமையேற்று சிறப்பாக அரசியல் பணியாற்றியவர் . 
மூத்த காங்கிரஸ்காரர் . அவர் தான் சார்ந்திருக்கின்ற பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் , முன்னேற்றத்திக்காவும் அயராது பாடுப்பட்டு அனைவரின் அன்பை பெற்றவர் . 

அவரது இழப்பு கன்னியாகுமரி மக்களுக்கு பேரிழப்பாகும் . அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gk vasan mourns the death of ex mla


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->