பூத் ஸ்லிப் முதல் பாதுகாப்பு வரை...தேர்தல் முன்னேற்பாடுகள் என்னென்ன...? - தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடி விளக்கம்
From booth slips security what election preparations Returning Officer Archana Patnaik quick explanation
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விரிவான விளக்கமளித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது," வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
மாவட்டங்களிலுள்ள அரசு அலுவலகங்களில் இருந்து தேவையான உபகரணங்களுடன், இயந்திரங்கள் கடுமையான காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ரூ.543 கோடி ரொக்கம் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ரூ.719 கோடி மதிப்பிலான பணமும் பொருட்களும் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனைத்து மையங்களிலும் வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வெளியே ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் கண்காணிப்பிற்காக 326 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; இதில் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவினக் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 5,949 மையங்கள் பதற்றமூட்டும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 325 மையங்களை பெண்கள் முழுமையாக நிர்வகிக்க உள்ளனர்; மேலும் 75 மையங்களை இளைஞர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக வேளச்சேரியில் 315 மையங்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 மையங்களும் செயல்படும். திரு.வி.க.நகர் தொகுதியில் நம்மாழ்வார்பேட்டை அரசு பள்ளியில் மட்டும் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களின் எண்ணிக்கை 14.59 லட்சமாக உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதிக வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளில் அருகிலேயே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க மாநகர பேருந்துகளில் இலவச பயண வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 234 தொகுதிகளுக்கு 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனி சி.ஆர்.பி.எப். படையினரும், 5,875 காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135-பி பிரிவின் கீழ், வாக்களிக்க பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயம். இதை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான புகார்களை பெற மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
From booth slips security what election preparations Returning Officer Archana Patnaik quick explanation