அதிமுக 200 இடங்களில் அமோக வெற்றிப்பெறும்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை..!
Former Minister Kadambur Raju expresses confidence that the AIADMK will achieve a resounding victory in 200 seats
காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் சித்ரகுப்த சுவாமி கோயில் அமைந்துள்ளது. நேற்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த தேர்தலிலேயே மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டனர். அந்தத் தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, கட்சித் தொடங்கித் தொடர்ந்து வெற்றி பெற்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவின் வாக்குச் சதவீதத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்ற நிலையோடு தேர்தல் முடிவுகள் வரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கையாக பேசியுள்ளார்.
English Summary
Former Minister Kadambur Raju expresses confidence that the AIADMK will achieve a resounding victory in 200 seats