களஆய்வு! சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக செல்கிறார் முதலமைச்சர்...! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டார்.இதில் ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்த விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு கோவையிலிருந்து முதலமைச்சர் சாலைமார்க்கமாக பெருந்துறை செல்ல விருக்கிறார்.

மேலும், ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.இன்று மாலை 5 மணிக்கு சேலம்- ஈரோடு மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து சுமார் 11 கி.மீ தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ' வில் பங்கேற்கிறார்.இதில்  சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பிறகு அன்று இரவு மேட்டூரில் தங்குகிறார்.இந்த சுற்றுப்பயணத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார்.

அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வருகிறார்.பிறகு  காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க இருக்கிறார்.

இந்த விழாவில் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். பிறகு சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Field study Chief Minister going 2 day tour Salem


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->