பரபரப்பு! மொதலை அடுத்து உண்ணாவிரதத்தில் இறங்கும் மல்லை சத்யா...!
Excitement Mallai Sathya goes on hunger strike after match
அண்மைக்காலமாக ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும்,துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இடையே கருத்து வேறுபாடாக இருந்தது தற்போது மோதலாக மாறி அதிகரித்து வருகிறது.

இதில் சமீப காலம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா தற்போது உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.
English Summary
Excitement Mallai Sathya goes on hunger strike after match