நிச்சயம்! உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்...இரு மாணவர்களின் வழியே பீட்டர் வாழ்வார்! - EPS - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி விளவங்கோத்திலுள்ள குழித்துறை தடுப்பணையில் 17 வயதான மனோ என்ற சிறுவனும், 12 வயதான அகிலேஸ் என்ற சிறுவனும் தவறி விழுந்தனர்.இதனை எதிர்பாராமல் கண்ட ''பீட்டர் ஜான்சன்'' என்பவர் தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி 2 மாணவர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்டார்.

ஆனால் சற்றும் யோசிக்க முடியாத வகையில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த நிலையில், பீட்டர் ஜான்சனின் இறப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் ''எடப்பாடி பழனிச்சாமி'' இரங்கல் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி:

இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டதாவது,"கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை, அவ்வழியே சென்ற பீட்டர் என்பவர் தன் உயிரை துச்சமென எண்ணி, மாணவர்களைக் காப்பாற்றி, தன் இன்னுயிரை நீத்துள்ளார்.

தத்தளிக்கும் மாணவர்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காத்திட்ட பீட்டர் அவர்கள், தமிழக மக்களின் உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்.

இறந்தாலும் அனைத்தையும் கொடுக்கும் வாழை போல், தன் உயிரைத் தியாகம் செய்திடினும், அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார்!" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

example highest human values Peter live on through two students EPS


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->