தேர்தல் முடிந்த கையோடு.. அதிமுகவினருக்கு ஈபிஎஸ் விடுத்த எச்சரிக்கை..!!
EPS waring to AIADMK cadres
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு நான் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் பணியாற்றிய அதிமுக மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் முகவர்கள் தொண்டர்களுக்கு எனது நன்றி இணை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் கட்சியின் முகவர்கள் கண்காணிக்க வேண்டும்.
வாக்கு என்னும் ஐயங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
English Summary
EPS waring to AIADMK cadres