மு.க ஸ்டாலின் அசந்த நேரம்.. கவனத்தை ஈர்த்த ஈ.பி.எஸ்.!! குறுக்கே வந்த அப்பாவுவால் சலசலப்பு.!!
EPS submit attentive resolution on cauvery issue
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி காவடி நதிநீர் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
தவணை ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் ஆட்சியில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கடுமையாக எதிர்த்ததாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும், மேகதாது விவரகாரத்தில் கடன் ஆட்சியில் கடுமையாக எதிர்த்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது குறிப்பிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை பேசவிடாமல் தடுத்தார். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி நான் எழுப்பிய கேள்விக்கு நீர்வளத் துறை அமைச்சர் பதிலளிக்க தயாராக இருந்தும் அதனை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சலசலப்பு நீடித்தது.
English Summary
EPS submit attentive resolution on cauvery issue