சசிகலா காலில் விழுந்தது ஏன்? உதயநிதிக்கு ஈபிஎஸ் பதிலடி..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை தேர்தல் பணிமனையை திறந்து வைத்ததோடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் காட்டி விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி "புகைப்படத்தை காட்டட்டும்.. நான் பெரியவங்க கிட்ட ஆசி வாங்கியது தப்பா? நான் ஒன்று 3வது ஆளிடம் வாங்கலையே.. வெளியில் பிரதமரை எதிர்க்கிறோம் என வீர வசனம் பேசுகிறார்கள். 

பிரதமர் மோடி கருப்புக்கொடி பிடித்தால் கோபித்துக் கொள்வார் என வெள்ளை குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளார்கள். ஓடி ஓடி போய் தமிழ்நாட்டில் இருக்கும் திட்டங்களை துவங்கி வைக்க அழைக்கிறார். அங்க சரணகதி.. இங்க வீரவசனம்.. இதுதான் இரட்டை வேடம் திமுக" என உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS response to udhayanithi criticism


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->