காவலர்களுடன், பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!
Eps celebrating pongal 2021
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.
உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தமிழர் இன வரலாற்றில் தமிழினம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தை ஒன்றாம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற பொங்கல் விழாவில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றார்.
தமிழர்களின் இசையான பறையிசை ஒலிக்க, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று பல்வேறு பாரம்பரிய கலைகள் அரங்கேற, பொங்கல் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலை சிறப்பித்து வருகின்றனர். முதல்வர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியானது தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
English Summary
Eps celebrating pongal 2021